சென்னை ஆட்டோ ஸ்டிரைக் பிளாப் ஆனது
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று சென்னையில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.
சமீபத்தில் பெட்ரோல், டீசலின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதைக் கண்டித்து இன்று வேலை நிறுத்தப்போராட்டம் நடத்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் முடிவு செய்தது.
ஆனால், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.டி.யு. ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்களை தவிர பிறர்ஆட்டோக்களை வழக்கம்போல் ஓட்டினர். அதே போல இவர்களின் போராட்டத்துக்கு கால் டாக்சி போன்றஓட்டுனர்கள் ஆதரவு தரவில்லை.
இதனால் பெரும்பாலான ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.
ஆட்டோ ஸ்டிரைக் சார்.. மீறி ஓட்ரோம்.. அதனால் மீட்டருக்கு மேல் போட்டு கொடுங்க போன்ற வழக்கமானஆட்டோ டிரைவர்களின் ராவடிகள் இருந்தன.
சில இடங்களில் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.டி.யு. ஆகிய தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.அவர்களின் பேரணியும் நடந்தது.
தமிழகத்தில் மொத்தம் 1.2 லட்சம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 40,000 ஆட்டோக்கள்உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முறையாக பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களின் எண்ணிக்கை தான் இதுஎன்பது அதைவிட குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications