கருணாநிதி போட்ட தப்புக் கணக்கு: பா.ஜ.க. விமர்சனம்
திருச்செந்தூர்:
இடைத் தேர்தலில் திமுக தப்புக் கணக்குப் போட்டு விட்டது. இதனால்தான் அவர்கள் இடைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர்என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் அருகே நாதன்கிணறு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில்,
இடைத் தேர்தல் என்பது தேவையா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. தேர்தல் என்பது ஒரு கட்சியின் பிரதிதியைதேர்ந்தெடுப்பதற்காக நடப்பது.
எனவே ஒரு கட்சியின் எம்.எல்.ஏ. இறந்து விட்டால், அதே கட்சியின் சார்பில் மற்றொரு நபரை பிரதிநிதியாக நியமிக்ககட்சிகளுக்கு அதிகாரம் தர வேண்டும். சுயேச்சை எம்.எல்.ஏ. இறந்தால் மட்டுமே இடைத் தேர்தல் நடத்த வேண்டும்.இதற்கேற்றவாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தொகுதியில் 50க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடப்பது இதுவரைநடந்திராத ஒன்று. சைதாப்பேட்டையில் அந்த வரலாறு நிகழ்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கே இது களங்கம்.
பாரதீய ஜனதா இல்லாமலேயே ஜெயித்து விடலாம் என்று திமுக தப்புக் கணக்குப் போட்டது. அதன் விளைவு, வாணியம்பாடியில்கூட அதனால் வெற்றி பெற முடியவில்லை. கருணாநிதி போட்ட கணக்கு தப்பாகி விட்டது.
திமுக நடந்து கொள்ளும் விதத்தைப் பொருத்துத்தான் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது குறித்து முடிவுசெய்யப்படும் என்றார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கணேசன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், சந்தனக் கடத்தல் வீரப்பனையும்ஒப்பிட்டுப் பேசுவது தவறானது என்றார்.












Click it and Unblock the Notifications