சென்னையில் மர்ம நபர் தப்பியோட்டம்: வெடிகுண்டு வைக்க வந்தவனா?
சென்னை:
சென்னை வடபழனியில் மர்ம நபர் ஒருவன் குழி தோண்டி ஒரு பார்சலைப் புதைக்க முயன்றான். ஆனால்பொதுமக்கள் கூடியதைக் கண்டவுடன் அவன் ஓடி விட்டான்.
வடபழனியில் உள்ள சிவன் கோவிலின் பின்புறம் ஒரு குப்பை மேடு உள்ளது. நேற்று காலை சுமார் 10மணியளவில் அங்கு ஒருவன் உட்கார்ந்து குழி தோண்டிக் கொண்டிருந்தான். அவன் கையில் ஒரு பார்சல் இருந்தது.
அவன் வெடிகுண்டுகள் அடங்கிய பார்சலைத் தான் புதைக்கப் போகிறான் என்று அப்பகுதி மக்கள் சந்தேகத்துடன்அவனை நோக்கி வந்தனர். ஆனால் கூட்டம் கூடி வருவதைப் பார்த்தவுடன் அந்த நபர் பார்சலை அங்கேயேஅரையும் குறையுமாகப் புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதையடுத்து பொதுமக்களின் சந்தேகம் வலுக்கவே போலீசாருக்குத் தகவல் பறந்தது. விரைந்து வந்த போலீசார்அந்த மர்ம நபர் விட்டுச் சென்ற பார்சலைக் கைப்பற்றினர்.
அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த போது அதில் இரும்புத் துகள்களும் சாம்பல் பவுடரும் இருந்தது தெரிய வந்தது.பார்சலில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எங்களிடம் சிக்கும் நிலை வந்ததால் வெடிகுண்டை எடுத்துக் கொண்டுவேறு பொருள்களை மட்டும் அங்கேயே புதைத்துவிட்டு அந்த நபர் ஓடிவிட்டான் என பொது மக்கள்கூறுகின்றனர்.
ஆனால், பொதுமக்களைப் பயமுறுத்துவதற்காகவே வெடிகுண்டு வைப்பது மாதிரி யாரோ சிலர் சும்மா இதுபோன்ற விஷமத்தனமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications