ஸ்ரீநகரில் மிக் போர் விமானத்தில் தீ பிடித்தது
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் இந்திய விமானப் படையின் மிக் ரக போர் விமானத்தில் தீ பிடித்துக் கொண்டது. இதையடுத்து விமானிஉடனடியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்தின் ரன் வேயில் இந்த விபத்து நடந்தது. பகல் 12.25 மணிக்கு வழக்கமான பயிற்சியில்ஈடுபடுவதற்காக மிக் விமானத்தை விமானி ஸ்டார்ட் செய்தார். பறக்கத் தயாரானபோது என்ஜினில் தீ பிடித்தது.
உடனே இந்தத் தீ வேகமாக விமானம் முழுவதும் பரவியது. பறப்பதற்காக தன்னை சீட்டுடன் சேர்த்துபிணைத்திருந்த விமானி உடனடியாக தன்னை விடுவித்துக் கொண்டு கொண்டு வெளியே குதித்துவிட்டார்.இதனால் அவர் உயிர் தப்பினார்.
முதலில் இந்த விமானம் பறக்கும்போது தரையில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வந்தன. இதையடுத்துஉண்மை நிலையை விமானப் படை விளக்கியுள்ளது.
மிக் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளனதால் அவை பறக்க மத்திய அரசு தடை விதித்தது. அனைத்து மிக்விமானங்களையும் தரையிறக்குமாறு அரசு உத்தரவிட்டது.
இந் நிலையில் தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து அனைத்து மிக் விமானங்களும் மீண்டும்இயக்கப்பட்டன. இந் நிலையில் மீண்டும் மிக் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தையடுத்து ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பிற பயணிகள் விமானங்களை இயக்குவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது. ரன்வேயில் இந்த விபத்து நடந்ததால் விமானங்களை இயக்க இயலவில்லை. இதைத் தொடர்ந்துஜெட் ஏர்வேஸ் தனது விமானங்களை ரத்து செய்துவிட்டது.
பிரஜைகளை அழைக்கும் ஜப்பான்:
இந் நிலையில் எல்லையில் போர் மேகங்கள் சூழ்நிதிருப்பதால் ஜப்பான் தனது நாட்டினரை உடனே இந்தியா,பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பி விடுமாறு கூறியுள்ளது.
பாக் தாக்குதலில் மூவர் பலி:
இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த 3பேர் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு இந்தியப் படைகள் பதில் பீரங்கித் தாக்குதலில்ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க அமைச்சர் வருகை ஒத்திவைப்பு:
இந் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இந்தியா வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போது ஐரோபபாவில் உள்ள அவர் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வழியாக இந்தியா வர இருந்தார். ஆனால்,இப்போது அடுத்த வாரம் தான் இந்தியா, பாகிஸ்தானுக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த அவர் வருகிறார்.












Click it and Unblock the Notifications