Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க யோசனை: இந்தியா நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட்ஆர்மிடேஜ் இன்று இந்தியா வந்தார். நேற்று அவர் பாகிஸ்தானில் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சு நடத்தினார்.

இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசிய ஆர்மிடேஜ் எல்லையிலஅமெரிக்க-பிரிட்டன் படைகளைக் கொண்டு கண்காணிப்பில் ஈடுபடும் யோசனையைத் தெரிவித்ததாகக்தெரிகிறது.

ஆனால், இதை ஏற்க முடியாது என ஜஸ்வந்த் சிங் கூறிவிட்டார். எல்லையில் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்துகண்காணிப்பில் ஈடுபடலாம் என பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார். அது தான் இந்தியாவின் இறுதி முடிவு.

எங்கள் எல்லையில் மூன்றாவது நாட்டை அனுமதிக்க முடியாது என்று ஆர்மிடேஜிடம் ஜஸ்வந்த் சிங் கூறிவிட்டார்.

நேற்று பாகிஸ்தானில் இருந்து ஆர்மிடேஜ், தீவிரவாதிகள் எல்லை தாண்டிச் செல்வதைத் தடுக்குமாறு முஷாரபிடம்கூறினார்.

இன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ்மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார் ஆர்மிடேஜ்.

காஷ்மீர் எல்லையில் கூட்டுப் படை:

இதற்கிடையே காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க அமெரிக்க- பிரிட்டன் கூட்டுப்படைகளை நிறுத்தும் யோசனையை பிரிட்டன் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த யோசனையை அமெரிக்கா முதலில் தெரிவித்தது. இந்த யோசனையை இந்தியா ஏற்க மறுத்துவிடடதுகுறிப்பிடத்தக்கது.

பிரஜைகளை அழைக்கிறது போர்சுகல்:

இதற்கிடையே இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் தனது பிரஜைகள் உடனே நாடு திரும்புமாறு போர்சுகல்நாடு உத்தரவிட்டுள்ளது. போர் அபாயம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந் நாடுதெரிவித்துள்ளது.

புஷ்-புடின் பேச்சு:

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதைத் தவிர்ப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் ரஷ்யஅதிபர் விளாடிமிர் புடனும் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்.

பாக். அமைச்சர் ராஜினாமா:

இந் நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார். உடல் நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அவர் இன்று அறிவித்தார்.

நேற்றே இது தொடர்பா செய்திகள் வெளியாகின. இன்று அது உறுதியாகிவிட்டது.

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கு 4 பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. முன்னாள்வெளியுறவுத்துறை செயலாளர்கள் நிஜாமுதீன் ஷேக், ஷேக்யார் கான், ஐ.நாவுக்கான பாக் தூதர் மெலீனா லோதி,இப்போதைய வெளியுறவுச் யெலாளர் இனாமுல் ஹக் ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு வரலாம் என்றுதெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+