இடி வாங்கும் தேர்தல் கமிஷன்
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தல்- மறு தேர்தல் விவகாரத்தில் திமுகவிடமும் அதிமுகவிடமும் சிக்கி தேர்தல்கமிஷனின் மண்டை காய்ந்து போய்விட்டது.
ஜெயலலிதாவுக்கு தேர்தல் கமிஷன் ஆதரவாக நடந்து வருவதாகக் கூறிய திமுக தலைவர் கருணாநிதி, எங்களிடம்பணம் இல்லை என்றார். இதன்மூலம் தேர்தல் கமிஷனை ஜெயலலிதா பணத்தால் அடித்துவிட்டார் என்றதொனியில் பேசியுள்ளார் கருணாநிதி.
அதே நேரத்தில் நாங்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்திக் கொண்டிருக்கும் திடீரென தேர்தலை அறிவித்துதிட்டங்களை கூட நிறைவேற்ற முடியாமல் செய்துவிட்டது தேர்தல் கமிஷன் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் மிகவும் அவசரப்பட்டு மறு தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்தது என்றும் இந்த தேர்தலை ஒத்தி வைக்குமாறு நாங்கள் தேர்தல் கமிஷனிடம் கூறினோம். ஆனால், அதை அவர்கள் ஏறகவில்லை என்றும் கூறினார்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி தேர்தல் கமிஷனுக்கு இரு பக்கமும் இடி விழுந்து கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications