For Daily Alerts
Just In
கடலுக்குள் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து கடலில் மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்களைக் காணவில்லை என்று புகார்கொடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.
மாலையில் அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்னும் அவர்கள் வரவில்லை.
இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
கடலோரக் காவல் படையினர் உதவியுடன் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 8 மீனவர்களும் கடலில் திசை மாறி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.-
Comments
Story first published: Saturday, June 8, 2002, 5:30 [IST]