For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். மீது பறந்த இந்திய உளவு விமானம் வீழ்த்தப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்:

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை தனது நாட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான்கூறியுள்ளது.

நேற்று இரவு 11 மணியளவில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டத்தின் மீது இந்த விமானம் பறந்ததாகவும் அதைபாகிஸ்தான் போர் விமானங்கள் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தியதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறினார்.

சுடப்பட்ட இந்த விமானியில்லாமல் இயங்கும் விமானம் டோக்ரான் என்ற இடத்தில் தரையில் விழுந்துநொறுங்கியதாவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்குள் 21 கி.மீ. வரை அந்த விமானம் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், இதன்மூலம் இந்தியா தங்கள்நாட்டில் ஊடுருவியுள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்த விமானம் நுழைந்தவுடன் ரேடார்கள் அதைக் கண்டுபிடித்ததாகவும் இதையடுத்துபோர் விமானங்கள் அதை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தியதாக கூறுகிறது பாகிஸ்தான்.

ஒரு கரும்பு தோட்டத்தில் அந்த விமானம விழுந்து தீப் பிடித்தது. அந்த இடத்தை ராணுவம் உடனடியாக சுற்றிவளைத்தது. அந்த விமானம் விழுந்த இடத்திலிருந்து ஒரு கேமராவும் பிடிபட்டதாக ராணுவம் கூறியது.

இது டுரோன் ரகத்தைச் சேர்ந்த உளவு விமானம் என அந் நாடு கூறியுள்ளது.

இந்த உளவு விமானங்கள் பறக்கும்போதே அந்தப் பகுதிகளை படம்பிடித்து தரைக்கட்டுப்பாட்டுக்கு அனுப்பிவிடும் திறன் உடையவை. இதனால் எதிரியால் சுடப்பட்டாலும் உளவு பார்த்தது, பார்த்தது தான்.

இந்தியா ஒப்புக் கொண்டது:

தனது உளவு விமானம் பாகிஸ்தான் வானில் பறந்த போது காணாமல் போனதாக இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.லாகூர் மீது பறந்தபோது இந்த விமானத்துடனான தொடர்பு அறுந்தாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

இதுபோன்ற போர்க் கால சூழ்நிலையில் உளவு விமானங்களை இயக்குவது ஒன்றும் புதிதல்ல எனவும் இந்தியாகூறியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X