லண்டன்-டெல்லி: இனி இரட்டை நகரங்கள்
டெல்லி:
லண்டனும் டெல்லியும் இரட்டை நகரங்களாக அறிவிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான கலாச்சார உறவை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லி- சிகாக்கோ, டெல்லி- மாஸ்கோ ஆகியவை இரட்டை நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இப்போது இதில் லண்டனும் சேர்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டனும்டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித்தும் கையெழுத்திடவுள்ளனர்.
இது குறித்து ஷீலா கூறுகையில், உலகின் வர்த்தக தலைநகரான லண்டனிடம் இருந்து டெல்லி ஏகப்பட்டவிஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. டெல்லியும் பல விஷயங்களில் வேகமாக முன்னேறி வருகிறது.குறுகிய காலத்தில் 50,000 பஸ்களை டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றி சுற்றுச் சூழலைகாத்துள்ளோம்.
டெல்லியில் 36 சதுர கி.மீ. பரப்பில் மட்டுமே மரங்கள் இருந்தன. இதை கடந்த 3 ஆண்டுகளில் 108 சதுர கி.மீட்டாகஅதிகரித்துள்ளோம்.
லண்டனில் பாதாள ரயில் உள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு டிசம்பர் முதல் பறக்கும் ரயில் அறிமுகமாகும்.ஜப்பான் நிறுவனம் இதை அமைத்து வருகிறது. இதற்கான நவீன ரயில்களை கொரியாவிடம் இருந்துவாங்கவுள்ளோம் என்றார்.