தமிழக அமைச்சர்கள் இலாகா திடீர் மாற்றம்: பொன்னையனுக்கு நோஸ்-- கட்
சென்னை:
நிதியமைச்சர் பொன்னையன் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறையை முதல்வர் ஜெயலலிதா பறித்துள்ளார்.அதே போல வேலுச்சாமியிடம் இருந்த தொழில்துறையும் பறிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு கூடுதலாக தொழில்துறையும்வழங்கப்பட்டுள்ளது.
பொன்னையனிடம் இருந்து பறிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை (Information technology) சட்ட அமைச்சர்டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதனால் வேலுச்சாமி இனி வணிகவரித்துறை அமைச்சராக மட்டும் இருப்பார்.
இன்று காலை முதல்வர் ஜெயலலிதா ஆளுநர் ராம்மோகன் ராவை கவர்னர் மாளிகையில் சென்று சந்தித்தார்.
அப்போதே கோட்டையில் இருந்த அமைச்சர்கள் இடையே உதறல் ஆரம்பித்துவிட்டது (இதை தட்ஸ்தமிழ்பிற்பகலிலேயே வெளியிட்டது.).
சுமார் 15 நிமிடங்கள் ஆளுநரைச் சந்தித்த ஜெயலலிதா அவரிடம் அமைச்சர்களின் இலாகா மாற்றம் குறித்துபேசினார். பின்னர் புதிய தலைமைச் செயலாளராக சுகவனேஸ்வர் நியமிக்கப்பட்டதையும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் அதிரடி மாற்றம் குறித்தும் விவாதித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஸ்டாலின் பதவியைப் பறிக்கும் ஒரு நபர்-ஒரு பதவிசட்டம், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டம் ஆகியவற்றுக்கு ஆளுநர் எந்தவித எதிர்ப்பும்இன்றி ஒப்புதல் அளித்தார். இதற்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் பொன்னையன் வாணியம்பாடி தொகுதியின் பொறுப்பாளராகநியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலையை அவர் சரியாக செய்யவிலை என்றஅதிருப்தியில் ஜெயலலிதா இருந்தார்.
இதையடுத்து அவருக்கு இந்த நோஸ்-கட் தரப்பட்டுள்ளது.
அதே போல நயினார் நாகேந்திரனும் ஜெயலலிதாவின் அதிருப்தி லிஸ்டில் தான் இருக்கிறார். ஆனால், இவர்சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீது நடவடிக்கைக்கு பதிலாக பரிசு தான் கிடைத்துள்ளது.
முதலில் மின்துறை அமைச்சராக இருந்த இவர், பின்னர் போக்குவரத்து அமைச்சரானார். இப்போது அவரிடம்கூடுதலாக தொழில்துறையும் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவிடம் சசிகலாவின் செல்வாக்கு மீண்டும்நிரூபிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications