திருவண்ணாமலை கும்பாபிஷேகம்: கும்பகோணத்திலிருந்து வந்த கோபுர கலசங்கள்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் நடக்கவுள்ள கும்பாபிஷேத்திற்குத் தேவையான 142 கோபுரகலசங்கள் வந்து சேர்ந்தன.
இந்தக் கலசங்கள் கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்டன. கோபுரங்களில் இந்தக் கலசங்கள் பொறுத்தப்பட்டு 27ம்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும். வரும் 26ம் தேதியன்று கணபதி ஹோமத்துடன் இந்த புண்ணிய நிகழ்ச்சிகள்தொடங்குகின்றன.
26 ஆண்டுகளுக்குப் பின் இந்தத் திருக் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.
பஞ்சபூதங்களில் அக்னியின் இருப்பிடமாகக் கருதப்படும் திருவண்ணாமலையில் இந்த குடமுழுக்குக்காக 40,000சதுர அடியில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ரூ. 4 கோடி செலவில் கோவிலின் 9 கோபுரங்களிலும் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.
27ம் தேதி காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications