ஈரோட்டை கலக்கும் கள்ள நோட்டுகள்
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது.
டெக்ஸ்டைல்ஸ், கெமிகல்ஸ் என தொழில் நகரமான ஈரோட்டுக்கு பல மாநில தொழிலபதிர்களும் வந்துசெல்வதால் பணப் புழக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்த நகரில் தினந்தோறும் பல கோடிகளுக்கு வியாபாரம்நடந்து வருகிறது.
இதில் கள்ள நோட்டுகளும் அதிக அளவில் ஊடுருவி வருகின்றன. குறிப்பாக 100 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகளும் பெருமளவில் புழங்கி வருகின்றன. இப்போது 500 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளிலும் கள்ளநோட்டு கரன்சிகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன.
இது குறித்து மத்திய உளவுப் பிரிவினருக்கும் தகவல் தெரிந்துள்ளது. அவர்கள் ரிசர்வ் வங்கியை இந்த விஷயத்தில்உஷார்படுத்தினர். இதையடுத்து கள்ள நோட்டுகள் சிலவற்றை கைப்பற்றியது ரிசர்வ் வங்கி.
பின்னர் சில வரிசை எண்களைக் குறிப்பிட்டு இந்த எண்களைக் கொண்ட நோட்டுக்களை வாங்க வேண்டாம் என்றுஉத்தரவிட்டது. இந்த அறிவிப்பை கடைகள், பெட்ரோல் பங்குகள், ஒயின் ஷாப்கள் என அனைத்து இடங்களிலும்ஒட்டி வைக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், இதையும் மீறி ஈரோட்டில் கள்ள நோட்டுப் புழக்கம் மிக ஜோராய் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications