எல்லையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் இல்லை: பாக்.
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லையில் அல்-கொய்தா தீவிரவாதிகள் இல்லை என பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பின் லேடனின் அல்-கொய்தா தீவிரவாதிகள் கும்பல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தப்பிபாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளது. இவர்களை பாகிஸ்தான் இந்தியாவுக்குள் அனுப்ப முயன்று வருகிறது.
இதை இந்திய ராணுவமும் அமெரிக்காவும் உறுதி செய்துள்ளன. இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்டோனால்ட் ரம்ஸ்பீல்ட இதனைத் தெரிவித்தார்.
ஆனால், உலகமே ஒப்புக் கொண்டுவிட்ட இந்த உண்மையை பாகிஸ்தான் வழக்கம்போல் மறுக்கிறது. அந் நாட்டுராணுவ செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில்,
டோனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியதில் துளிகூட உண்மையில்லை. இது எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது என்றுதெரியவில்லை. இந்தியாவின் பொய்ப் பிரச்சாரத்தை அமெரிக்கா நம்புகிறதோ என்று நினைக்கிறோம்.
காஷ்மீர் பிரச்சனையை திசை திருப்ப இந்தியா வழக்கமாக செய்து வரும் செயல்களில் இதுவும் ஒன்று என்றார்.
நேற்று டெல்லியில் இருந்த ரம்ஸபீல்ட் இன்று இஸ்லாமாபாத்தில் உள்ளார்.
படை வாபஸ் இல்லை: இந்தியா
பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியப் படைகளை வாபஸ் பெற மாட்டோம் என வெளியுறவுத்துறைஇணையமைச்சர் ஒமர் அப்துல்லா கூறினார்.
அப்துல்லா கூறுகையில், ரம்ஸபீல்ட் கூறியதைப்போல அல்-கொய்தாவை எதிர்கொள்ள எங்களுக்கு வெளிநாட்டுபடைகளின் உதவி தேவையில்லை. எந்தத் தீவிரவாதிகளையும் இந்திய ராணுவம் முறியடிக்கும்.
தீவிரவாதிகளை ஒடுக்குவோம் என சர்வதேச நெருகுதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் பொய்யான உறுதிமொழிகளைத்தந்துவிட்டு தப்பிக்க முடியாது. உண்மையிலேயே தீவிரவாதிகளை ஒடுக்காத வரை இந்தியப் படைகள் எல்லையில்நிற்கும். பாகிஸ்தானுக்கு நெருக்குதல் தருவதை இந்தியப் படைகள் நிறுத்தாது.
எங்கள் நாட்டுக்குள் தீவிராவாதிகள் நுழைவது நிற்கும் வரை பாகிஸ்தானை விட மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications