தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
சென்னை:
இந்திய- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை பயன்படுத்தி சென்னையில் தேச விரோத அமைப்புகள்தீவிரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப் பிரிவு மாநில போலீசாரை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னையில் போலீசாரின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் உருவாக்கப்பட்டசிறப்பு அதிரடிப் படையினர் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் போலீசார் சிறு சிறு குழுக்களாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை நகர காவல்துறை ஆணையாளர் விஜய்குமார் இந்தத் தகவல்களை உறுதி செய்தார். சமீபத்தில் டி.ஜி.பி.அலுவலகம் அமைந்துள்ள கடற்கரைச் சாலையில் உள்ள லைட்ஹவுசில் ஒருவன் பைனாகுலர்களுடன் ஏறிகண்காணித்தான்.
இதை பார்த்த ரகசிய போலீசார் உடனடியாக சென்னை காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தனர்.உடனே போலீசார் விரைந்து வந்து அவன் கீழே இறங்கியவுடன் வளைத்துப் பிடித்தனர்.
அவனை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு கொண்டு சென்று நன்றாக கவனித்தனர். அடி பொறுக்காமல் அவன் கக்கியவிஷயங்கள் அதிர்ச்சியைத் தந்துள்ளன.
சென்னையில் அசம்பாவித சம்பவங்களை நடத்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இன்று நிருபர்களிடம் பேசிய விஜய்குமார், சென்னை நகர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான கண்காணிப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. ஏரியாக்களுக்கும் துறைமுகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிக பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
ரயில் நிலையத்துக்கு மிரட்டல்:
இந் நிலையில் கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் அல்-உம்மாதீவிரவாத இயக்கத்தின் தலைவர் பாட்சா மற்றும் மதானி ஆகியோரை 55 நாட்களுக்குள் சிறையில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரயில் நிலையத்தையும் தண்டாளங்களையும் குண்டு வைத்துத்தகர்ப்போம் என்றும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதையைடுத்து கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்தண்டவாளங்களைக் கண்காணிக்க சிறப்புப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications