விமானப் படைக்கு 140 புதிய பிரான்ஸ் போர் விமானங்கள்
டெல்லி:
தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது.
சமீபத்தில் பாகிஸ்தானுடனான பதற்றம் குறைந்து வருவதையடுத்து நடக்கும் முதல் கூட்டம் இது.
இக் கூட்டத்தில் எல்லை நிலவரம், பாகிஸ்தானில் காத்திருக்கும் தீவிரவாதிகள் ஆகியவை குறித்துவிவாதிக்கப்படும்.
பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி, முப்படைத் தலைவர்கள், பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, ராணுவ உளவுப் பிரிவினர், மத்திய உளவுப் பிரிவினர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
விமானப் படை:
உடனடியாக மிராஜ்-2000 ரக போர் விமானங்களை வாங்க வேண்டும் என இந்திய விமானப் படை மத்தியஅரசிடம் வலியுறுத்தியுள்ளது.
மிக் விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருவதாலும் ரஷ்யாவிடம் இருந்து சுகோய்- 30 ரக விமானங்கள் வருவதில்தாமதம் ஏற்பட்டுள்ளதாலும் மிராஜ்-2000 விமானங்களை உடனே வாங்க வேண்டும் என விமானப் படைவலியுறுத்தி வருகிறது.
இப்போதுள்ள எல்லைப் பகுதி நிலவரத்தைக் கணக்கில் கொண்டு 140 விமானங்களை வாங்க வேண்டும் எனவிமானப் படை கூறியுள்ளது.
பாகிஸ்தானிடம் உள்ள லேட்டஸ்ட் விமானங்கள் இந்த மிராஜ்கள் தான். பிரான்ஸ் தயாரிப்பான இந்த விமானங்கள்மூலம் அணுகுண்டுகளை வீச முடியும். இந்தியாவிடமும் இந்த ரக விமானங்கள் உள்ளன.
கார்கில் போரின்போது தீவிரவாதிகளையும் பாகிஸ்தான் படையினரையும் தேடித்தேடி மிகத் தவறாமல் குணடுவீசித் தாக்க இந்த விமானங்கள் உதவின. எதிரி நாட்டு ராடார்களை ஜாம் செய்துவிடும் திறன் படைத்தவை இந்தவிமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானப் படையின் இந்த கோரிக்கை குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான விவரங்கள்இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகின்றன.
அமெரிக்கா மேற்கொண்டு அமைதி முயற்சிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படுகிறது.