அலை மோதிய நிருபர்கள்
அடுத்த குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள விஞ்ஞானி அப்துல் கலாம் முதலில் நிருபர்களை சந்திக்காமல் செய்தியை மட்டும்வெளியிட்டார். பின்னர் அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தின் முன் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பேட்டி கொடுக்கும் இடம் கடைசி நிமிடத்தில் தான் அறிவிக்கப்பட்டது. இதனால்,நிருபர்களும், புகைப்படக்காரர்களும் குழம்பிப் போய் விட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில்தான் கலாம் தங்கியுள்ளார். இதையடுத்து அங்கு தான் அவர் பேட்டி கொடுப்பார் என்றுநிருபர்கள் அங்கு படையெடுத்தார்கள். ஆனால் துணைவேந்தர் அறையில் அவர் பேட்டி கொடுக்கலாம் என்று சிலர் சந்தேகம் எழுப்பவேஅங்கும் ஓடினர் நிருபர்கள்.
ஆனால், பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் முன்பாகவே அவர் நிருபர்களை சந்தித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கலாம் அருகில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
அங்கு வந்த கலாம், செய்தியாளர்களிடம் அனைவரும் செளக்கியமா, இந்த இடம் வசதியா இருக்கா என்று கேட்டார்.
அப்போது புகைப்படக்காரர்கள் தரப்பிலிருந்து உங்களை அருகில் வந்து படமெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். அதற்கு, எடுத்துட்டாபோச்சு என்று கூறிய கலாம், பாதுகாப்பை கொஞ்சம் தளர்த்துமாறு போலீசாரிடம் கூறினார்.
பிறகு புன்னகையுடன் புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.
பேட்டியின்போது எழுதி வைத்திருந்த செய்தியை வாசித்த அவர் அவ்வப்போது புரிகிறதா என்று கேட்டுக் கொண்டார். அவ்வப்போதுஆசிரியராகவும் மாறி நிருபர்களையே கேள்வி கேட்டார்.
போர்பந்தர் எதற்குப் பெயர் பெற்றது தெரியுமா? என்றார் . அதற்கு ஒரு நிருபர், அங்குதான் சாரக் மகாத்மா காந்தி பிறந்தார் என்றார். இதைக்கேட்டதும் புன்னகைத்த கலாம், வெரிகுட், வெரிகுட் என்றார்.
தமிழில் பேட்டி கொடுத்தாலும் அவ்வப்போது அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொன்னார். மொத்தத்தில் இந்தப் பேட்டி மிகவும்வித்தியாசமாக இருந்தது. நிருபர்களுக்கு இந்த பேட்டியே மிக வித்தியாசமாக இருந்தது. அரசியல்வாதிகளைப் பார்த்து, பார்த்துப் புளித்துப்போயிருந்த செய்தியாளர்களுக்கு சாதாரண செருப்புடன் மிகவும் எளிமையாக வந்து அன்புடன் பேசிய கலாமைக் கண்டுபெருத்த ஆச்சரியமாக இருந்தது.












Click it and Unblock the Notifications