வாஜ்பாய் வீட்டில் விருந்து
சென்னை:
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக இன்று(திங்கள்கிழமை) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.45 மணிக்கு வழக்கமான இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அப்துல் கலாம் டெல்லிசென்றார்.
அப்துல் கலாமை மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் சென்னைக்கு வந்து அழைத்துச் சென்றார். சென்னை விமான நிலையத்தில்அவரை தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பல கட்சிப் பிரமுகர்கள், பொது மக்கள்பொன்னாடைகள் போர்த்தி வழியனுப்பி வைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய கலாம், டெல்லிக்குப் போறேன்.. வந்துபார்க்கிறேன் என்று மிக எதார்த்தமாக பேசியபடி சென்றார்.
டெல்லி போய்ச் சேர்ந்த கலாமை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர்அலுவலகத்துறை அமைச்சர் கோயல், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், கலாமைஜனாதிபதியாக்கலாம் என்று முதன்முதலில் கூறிய சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவரான அமர்சிங் ஆகியோர் வரவேற்றனர்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். வீரத் திலகம் இட்டு அழைத்துச் சென்றனர். அவருக்கு மாலை அணிவிக்க முடியாதபொது மக்கள் அவர் சென்ற கார் மீது மாலைகளை வீசினர்.
பின்னர் கலாம் பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்தார். கலாமை ஜனாதிபதி பதவிக்கு வாஜ்பாய் அறிவித்த பின்னர்இருவரும் இப்போது தான் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கின்றனர். அப்துல் கலாமை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தார்வாஜ்பாய். பின்னர் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் அப்துல் கலாமுக்கு வாஜ்பாய் மதிய விருந்தளித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் அத்வானி, பிரமோத் மகாஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் வீட்டுக்குச் சென்ற கலாம் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனைநடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் கலாம் இன்றுசந்திக்கிறார். இடையிடையே தன்னை வாழ்த்த வந்த பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானிகளுடனும் அவர் முக்கியஆலோசனைகள் நடத்தினார்.
தேவ கெளடா பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் தான்அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்தார். அவர் தான் இப்போதும் அப்துல் கலாம் பெயரைஜனாதிபதி பதவிக்கு முதன்முதலில் முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications