வாஜ்பாய் வீட்டில் விருந்து
சென்னை:
பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக இன்று(திங்கள்கிழமை) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து இன்று காலை 6.45 மணிக்கு வழக்கமான இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அப்துல் கலாம் டெல்லிசென்றார்.
அப்துல் கலாமை மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் சென்னைக்கு வந்து அழைத்துச் சென்றார். சென்னை விமான நிலையத்தில்அவரை தமிழக அமைச்சர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பல கட்சிப் பிரமுகர்கள், பொது மக்கள்பொன்னாடைகள் போர்த்தி வழியனுப்பி வைத்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய கலாம், டெல்லிக்குப் போறேன்.. வந்துபார்க்கிறேன் என்று மிக எதார்த்தமாக பேசியபடி சென்றார்.
டெல்லி போய்ச் சேர்ந்த கலாமை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர்அலுவலகத்துறை அமைச்சர் கோயல், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன், கலாமைஜனாதிபதியாக்கலாம் என்று முதன்முதலில் கூறிய சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவரான அமர்சிங் ஆகியோர் வரவேற்றனர்.
அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். வீரத் திலகம் இட்டு அழைத்துச் சென்றனர். அவருக்கு மாலை அணிவிக்க முடியாதபொது மக்கள் அவர் சென்ற கார் மீது மாலைகளை வீசினர்.
பின்னர் கலாம் பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்தார். கலாமை ஜனாதிபதி பதவிக்கு வாஜ்பாய் அறிவித்த பின்னர்இருவரும் இப்போது தான் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கின்றனர். அப்துல் கலாமை கட்டித் தழுவி வாழ்த்துத் தெரிவித்தார்வாஜ்பாய். பின்னர் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் அப்துல் கலாமுக்கு வாஜ்பாய் மதிய விருந்தளித்தார். இதில் மத்திய அமைச்சர்கள் அத்வானி, பிரமோத் மகாஜன்ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் வீட்டுக்குச் சென்ற கலாம் அவருடன் 1 மணி நேரம் ஆலோசனைநடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரையும் கலாம் இன்றுசந்திக்கிறார். இடையிடையே தன்னை வாழ்த்த வந்த பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானிகளுடனும் அவர் முக்கியஆலோசனைகள் நடத்தினார்.
தேவ கெளடா பிரதமராக இருந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த முலாயம் சிங் யாதவ் தான்அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கச் செய்தார். அவர் தான் இப்போதும் அப்துல் கலாம் பெயரைஜனாதிபதி பதவிக்கு முதன்முதலில் முன் மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications