விடுமுறையில் செல்ல ராணுவ வீரர்களுக்கு அனுமதி
டெல்லி:
6 மாதங்களுக்குப் பின் இப்போது தான் முதன்முறையாக இந்திய ராணுவ வீரர்களுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம் அதிகரித்ததால் வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். அவர்களது விடுமுறைகள் ரத்துசெய்யப்பட்டன. காஷ்மீர் முதல் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் என எல்லை முழுவதும் வீரர்கள் கடந்த 3மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இப்போது எல்லையில் பதற்றம் குறைந்து வருவதால் ராணுவ வீரர்களுக்கு முதன்முதலாக விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அழைப்பு வரலாம் என்ற எச்சரிக்கையுடன் இந்த வீரர்கள்விடுமுறையில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
எல்லையில் தீவிரவாதிகள் நுழைவது பெருமளவில் குறைந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் கூறினார்.
ராணுவத் தளபதி ஜெனரல் பத்மநாபனும் இதையே தெரிவித்தார். சன் டிவி நிருபரிடம் அவர் தமிழில் அளித்தபேட்டியில், கடந்த மே இரண்டாம் வாரத்தில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தீவிரவாதி தான் ஊடுருவினான்.பாகிஸ்தான் இப்படியே நல்ல பிள்ளையாக இருப்பது நல்லது. ஏதாவது தகராறு செய்தால் என்ன செய்யனும்னுஎனக்குத் தெரியும் என்றார்.
எல்லையில் நிலைமை சகஜமாகி வருவதால் பஞ்சாபின் வாஹா எல்லை வழியாக தரைவழிப் போக்குவரத்தைஇந்தியா மீண்டும் அனுமதிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இந்தியாவிருந்து கார்கள் மூலம் பாகிஸ்தானுக்குள்செல்ல முடியும்.
அதே போல இரு மாநில ராணுவ டைரக்டர் ஜெனரல்களும் அவ்வப்போது பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடலாம்என்ற யோசனையையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
இரு தரப்பினரும் பேச்சு நடத்தலாம் என்று இந்தியா கூறியிருப்பது இதுவே முதன்முறையாகும். இரு ராணுவடைரக்டர் ஜெனரல்களுக்கும் இடையே ஹாட்-லைன் வசதி உள்ளது. அதன் மூலம் அவ்வப்போது எல்லையில்தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளிட்ட பிற பிரச்சனைகளை பேசிக் கொள்ளலாம் என சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications