For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. நாளை திருப்பூர் பயணம்: கொலை மிரட்டலால் தீவிர பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருப்பூர்:

முதல்வர் ஜெயலலிதா நாளை கோவை மாவட்டம் செல்கிறார். அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் மிகபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னையிலிருந்து திருப்பூர் செல்கிறார் அவர். அங்கு ரூ. 960கோடியில் நிறைவேறறப்படவுள்ள குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

திருப்பூர் வரும் ஜெயலலிதாவைக் கொல்லப் போவதாக பாரத பெண்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம்மிரட்டல் விடுத்துள்ளது. ஜெயலலிதாவைக் கொல்ல 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த மர்மக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பூர் முழுவதும் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விழா நடக்கும் மைதானத்தில் 7நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டு மற்ற பகுதிகள் மூடப்பட்டுவிட்டன.

இந்த 7 நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசாரின முழு சோதனைக்குப்பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

அல்-உம்மா கும்பல்கள் கோவை மாவட்டத்தில் தான் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் மிரட்டல் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X