ரொம்ப சந்தோஷம்: கருணாநிதி
சென்னை:
மேயர் பதவியை பறித்ததால் ரொம்ப கவலைப்படவில்லை. சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனால் ஏமாற்றம் எதுவும் இல்லை.மக்கள் பணி செய்ய பதவி தேவையில்லை என்று திமுக தலைவர் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சென்னை மேயராக உள்ள மு.க.ஸ்டாலினின் பதவியை தமிழக அரசு புதிய சட்டம் மூலம் பறித்துள்ளது. தமிழக அரசு எடுக்கும் அடுத்தநடவடிக்கையைப் பொறுத்து இன்று அல்லது நாளை முதல் ஸ்டாலினின் மேயர் பதவி முடிவுக்கு வருகிறது.
கோர்ட் தீர்ப்பு குறித்து கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, இதனால் நாங்கள் கவலையில் ஆழ்ந்து விடவில்லை, ஏமாற்றம்அடையவும் இல்லை. வேண்டுமானால், இனிப்பு வினியோகித்து கூட நாங்கள் கவலைப்படவில்லை என்பதை நிரூபிக்க நான் தயாராகஇருக்கிறேன்.
கோர்ட் தீர்ப்பை முழுமையாக படித்துப் பார்க்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. தீர்ப்பிலிருந்து நான் புரிந்து கொண்டது, நாளை முதல்ஸ்டாலின் சென்னை மேயராக இருக்க மாட்டார் என்பதுதான்.
பதவி போனதால் இனி கட்சிப் பணியாற்ற ஸ்டானுக்கு அதிக நேரம் கிடைக்கும் என்றார் கருணாநிதி.