கடலில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மெரீனாவில் 3 இளைஞர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கமலநாதன், திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மதன் குமார்.
இவர்கள் மூன்று பேரும் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பெரும் அலை அவர்களை இழுத்துச் சென்றது. அவர்களால் திரும்ப நீந்திகரை சேர முடியாத அளவுக்கு அலையின் வேகம் இருந்தது.
கடலில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களது உடல்கள் துறைமுகம் பகுதியில் கரை ஒதுங்கின.












Click it and Unblock the Notifications