மதுரை அல்லது திருச்சியில் காங்கிரஸ்- தமாகா இணைப்பு விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
த.மா.கா- காங்கிரஸ் இணைப்புக்கான இடம் குறித்து முடிவு செய்ய இன்று த.மா.கா. மாவட்டச் செயலாளர்களின்கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது.
கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை தொடங்கிய இந்தக் கூட்டத்துக்குகட்சியின் தலைவர் வாசன் தலைமை வகித்தார்.
மாலை வரை நடக்கும் இக் கூட்டத்தில் கட்சிகள் இணைப்புக்கு முறைப்படியான ஒப்புதலை வாசன் பெறுவார்.
கூட்டத்தில் 51 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சிகளின்இணைப்பு விழாவை மதுரை அல்லது திருச்சியில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கட்சிகளின் இணைப்பு விழா வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications