தாமரைக்கனியின் இளைய மகனுக்கு கத்திக் குத்து: மூத்த மகனின் ஆதரவாளர்கள் வெறிச் செயல்
ஸ்ரீவில்லிபுத்தூர்:
திமுகவில் உள்ள தாமரைக்கனியின் இளைய மகனை அதிமுக எம்.எல்.ஏவாக உள்ள மூத்த மகனின்ஆதரவாளர்கள் கத்தியால் குத்தினர். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.தாமரைக்கனியின் கண் முன்னால் இச் சம்பவம் நடந்தது.
அதிமுகவில் இருந்த தாமரைக்கனி சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனானஇன்பத் தமிழனுக்கு சீட் கொடுத்து அவரை எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. அவர் தாமரைக்கனியை எதிர்த்துப்போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து அப்பாவும் மகனும் ஒருவரை ஒருவர் வசைபாடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவராக தாமரைக்கனி தான் இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டிலேயேகுடிநீர் குழாய் இணைப்புகளை கட் செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி.
இந் நிலையில் இன்று காலை தாமரைக்கனி தனது இளைய மகன் தங்கமாங்கனியோடு நகராட்சிக்குச் சென்றார்.அங்கு மூத்த மகனும் அதிமுக எம்.எல்.ஏவுமான இன்பத்தமிழன் பொது மக்களிடம் மனு வாங்கிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து டென்சனான தாமரைக்கனி, நகராட்சிக்குள் வந்து எப்படி நீ மனு வாங்கலாம் என்றுஇன்பத்தமிழனிடம் கேட்டார். தந்தைக்கு ஆதரவாக தங்கமாங்கனியும் அண்ணணிடம் வாதாடினார். இது பெரும்மோதலாக வெடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது எம்.எல்.ஏ. இன்பத்தமிழனின் ஆதரவாளர்களில் ஒருவன் கத்தியால் தங்கமாங்கனியைத் தாக்கினான்.இதில் தங்கமாங்கனி பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனது ஆட்களுடன் சேர்ந்துமருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார் தாமரைக்கனி.
சமீபகாலமாக தாமரைக்கனியை தமிழக பல்வேறு வகைகளில் நெருக்கி வருகிறது. வீட்டில் குழாய் இணைப்பைதுண்டித்ததோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரைக் கொண்டு அவரது வீட்டில் சோதனையும் நடத்தியது அரசு.
இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறார் தாமரைக்கனியின் மகனானஇன்பத்தமிழன் எம்.எல்.ஏ. இன்று அவரது தம்பியையே இன்பத்தமிழனின் ஆட்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
நகராட்சியில் மனு வாங்க வந்த எம்.எல்.ஏவுடன் வந்தவர்கள் எதற்காக கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன்வந்தார்கள் என்று தெரியவில்லை.
இந்தச் சம்பவத்தால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.