பிரதமர், சோனியாவுக்கு ராமதாஸ், பா.ஜ.க. கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி பிரச்சனையில் தலையிட்டு தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கும், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமருக்கு தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் இல.கணேசனும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமருக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், காவிரியில் கிடைக்கச் செய்ய வாஜ்பாய் உடனடியாக தலையிடவேண்டும் என்று கூறியுள்ளார்.

சோனியா காந்திக்கு எழுதயுள்ள கடிதத்தில், கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசை வலியுறுத்தி நீரைவிடச் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந் நிலையில் தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய இல.கணேசன்,

இந்த விவகாரத்தில் புதிதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போடும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம்துரதிஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இல்லாமல் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருந்தால் ஒருவேளை அவர் இரு மாநிலமுதல்வர்களையும் அழைத்துப் பேசி நீர் கிடைக்கச் செய்திருப்பார். அதைத் தவற விட்டுவிட்டது தமிழகம்.

காவிரி விவகாரத்தில் திமுக, பா.ம.கவின் கருத்தை பா.ஜ.க. ஏற்கிறது என்றார்.

காவிரியில் நீர் பெற்றுத் தர தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம்திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து விவசாயிகள் அமைப்புகள், எதிர்க் கட்சிகள் கலந்து கொள்ளும் ஒருமாநாட்டை நடத்தவும் அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+