Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு உதவாது: பாலு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு உதவாது என வனத்துறை இணையமைச்சர் டி.ஆர்.பாலுகூறினார்.

முன்பு வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் பேசிய பாலு,

காவிரி ஆணையத்தில் இருந்து விலகிக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது பொறுப்பற்றசெயலாகும். இந்த விவகாரத்தில் காவிரி ஆணையத்தின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று பிரதமர்வாஜ்பாயை ஜெயலலிதா ஏன் நிர்பந்திக்கவில்லை?

இந்த விவகாரத்தில் பிரதமர் தலைமையில் கூட்டம் நடந்தால் தான் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜெயலலிதா முயலவேண்டும்.

வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசு நேரடியாக உதவ முடியாது. இரு மாநில அரசுகளுக்கும் மாரல் சப்போர்ட் தான்தர முடியும். நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியையும், நடிகர் ரஜினியையும்சேர்க்க தமிழக அரசு முயல்வது குறித்து முழு விவரம் எனக்குத் தெரியவில்லை.

தமிழகத்தில் சந்தனக் கடத்தல் அதிகரித்து வருவதாக புகார் வருகிறது. இதை மாநில அரசு தான் தடுத்து நிறுத்தவேண்டும்.

நாட்டின் வனப் பரப்பு வெறும் 19.17 சதவீதமாக உள்ளது. மொத்தம் 3,369 சதுர கி.மீ. பரப்பில் தான் இதை 33.3சதவீதமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+