பா.ம.கவுக்கு கூடுதல் மத்திய அமைச்சர் பதவிகள் வேண்டும்: ராமதாஸ்
சென்னை:
மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக் கட்சியின் சார்பில் சண்முகத்துக்கு உணவு பதப்படுத்தல்துறை தனிப் பொறுப்பாகவும், மூர்த்திக்கு ரயில்வேதுறை இணையமைச்சர் பதவியும் தரப்பட்டுள்ளது.
நேற்று டெல்லியில் நடந்த அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ராமதாஸ் இன்றுசென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
எங்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளன. இதனால் திருப்தியடைந்துள்ளோம். ஆனால், எங்களுக்குகூடுதல் இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதற்காக தொடர்ந்து முயல்வோம் என்றார்.தமிழகத்துக்கு உதவுவேன்: அமைச்சர் பேட்டிகாலையில் தனது துறையில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுவிட்டு ராமதாசுடன் சென்னை திரும்பிய சண்முகம்கூறுகையில்,முடிந்தவரை தமிழகத்துக்கு உதவி செய்வேன். தமிழகத்தில் உள்ள உணவு பதப்படுத்தல் தொழில்துறைவளர்ச்சிக்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்றார்.