பிரபல ரவுடி வெட்டிக் கொலை: சிதம்பரத்தில் பீதி, கடைகள் அடைப்பு
சிதம்பரம்:
சிதம்பரத்தில் பிரபல ரவுடி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டான்.இதையடுத்து அவனது கூட்டாளிகள் பதில் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் இந்த நகர் முழுவதும் கடைகள்அடைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் தெற்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவன் குமார் என்ற குட்டைக் குமார். இவன் மீது கொலை முயற்சி,பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
பால் வியாபாரம் செய்து வந்த இவனுக்கும் பிற ரவுடிக் கும்பல்களுக்கும் இடையே விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் இன்று காலை வழக்கம்போல் சிதம்பரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஹோட்டலில்பால் ஊற்றிவிட்டு அங்கு குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது பட்டாக் கத்திகளுடன் ஒரு கும்பல் அங்கு வந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களின்கண் முன்பாகவே குமாரை கண்டந்துண்டமாக வெட்டிச் சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் அவன் ஹோட்டலிலேயே பிணமானான்.
இச் சம்பவத்தால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குமாரின் கோஷ்டியினர் பதில் தாக்குதல்நடத்தலாம் என்பதாலும், ரவுடிக் கும்பல்கள் இடையே சாதிரீதியிலான மோதல் ஏற்படலாம் என்ற அச்சம்காரணமாகவும் நகரின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
அங்கு பெரும் பீதி நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications