வேலையில்லா பிரச்சனையை திசை திருப்பவே இந்த கைது: நல்லகண்ணு
சென்னை:
காவிரிப் பிரச்சனை, ரேசன் கடை பிரச்சனை, வேலை வாய்ப்பு இன்மை ஆகிய பிரச்சனைகளில் தமிழகம் சிக்கித்தவித்துக் கொண்டுள்ள நிலையில் அதிலிருந்து எல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத் தான்வைகோ கைது போன்ற நாடகங்களை தமிழக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. ரேசன் கடைகளில் அரிசிதருவதில் ஏகப்பட்ட குழப்பம், காவிரி வறண்டதால் விவசாயிகள் அரை பட்டினியில் கிடக்கின்றனர்.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் சும்மா ஸ்டாலின் பதவிப் பறிப்பு, அடுத்து வைகோ கைது என்று மக்களின்கவனத்தை திசை திருப்பும் செயல்களைத் தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.
இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று நல்லகண்ணுS a] ސР( •u-96;uܟ )
-->