வைகை எக்ஸ்பிரஸ் செங்கையில் நிற்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு ஏற்பாடுசெய்யப்படும் என்று மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் சென்ற அமைச்சர் மூர்த்தி அங்குசெய்தியாளர்களிடம் பேசுகையில், காஞ்சிபுரம்- அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் பேசி முடிவு செய்யப்படும். சில காரணங்களால் இதில்ராணுவத்தின் அனுமதி அவசியப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. விரைவில் இது திறக்கப்படும்.
மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications