தொழிலதிபர் அம்பானி மரணம்: தலைவர்கள் இரங்கல்
மும்பை:
ரிலையன்ஸ் குரூப் சேர்மன் திருபாய் அம்பானி நேற்று நள்ளிரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது69.
கடந்த ஜூன் 24ம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அம்பானிசேர்க்கப்பட்டார். செயற்கைச் சுவாசக் கருவிகளின் உதவிகளுடனேயே கடந்த 14 நாட்களாக அம்பானி உயிருக்குப்போராடி வந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அம்பானி மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்,நடிகர்கள் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜ்பாய் தன்னுடைய இரங்கல் செய்தியில், தொழில்துறையில் இளைஞர்கள் காட்ட வேண்டிய ஆர்வத்துக்குபெரும் எடுத்தக்காட்டாக விளங்கியவர் அம்பானி என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக அமைச்சர் விஜய் கோயல் மும்பை விரைந்து வாஜ்பாய் சார்பாக அம்பானியின் உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினார்.
அம்பானியின் மறைவு இந்தியத் தொழில்துறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு என்று பிரபல தொழிலதிபர்கோயங்கா தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பானியின் உடல் தெற்கு மும்பையில் உள்ள மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.
அம்பானியின் மறைவையொட்டி மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் நாளை காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம்மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications