ரயில் பாதைகளில் அனுமதியற்ற விளம்பர போர்டுகள் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ரயில் பாதைகளை ஒட்டி அனுமதி பெறாமால் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள்அகற்றப்பட்டன.

சென்னையில் விளம்பர போர்டுகளுக்குப் பஞ்சமே இல்லை. எங்கு பார்த்தாலும் வானளாவ விளம்பர போர்டுகள்உயர்ந்து நின்று மக்களை ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்தினாலும் மறு பக்கம் எப்போது கீழே விழுந்து விடுமோ என்றுஅஞ்சவும் வைக்கும்.

ரயில்களில் வரும் பயணிகளைக் கவருவதற்காக ரயில் பாதைகளில் அருகிலும் நூற்றுக்கணக்கான விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பலகைகள் தென்னக ரயில்வேயின் அனுமதியைப்பெறாமலேயே வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் ரயில்வே இணை அமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஏ.கே. மூர்த்தி, இவ்வாறுஅனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக விளம்பரதாரர்கள் அவர்களே தானாக முன் வந்து போர்டுகளை அகற்றுவதற்கு 24 மணி நேர காலஅவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னையில் நேற்று பறக்கும் ரயில் பாலத்தை ஒட்டி அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஏராளமானவிளம்பர போர்டுகள் அகற்றப்பட்டன.

விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அனுமதியில்லாத விளம்பர போர்டுகள் அகற்றப்படும் என்று தென்னகரயில்வே அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+