சுதந்திர தினத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்
டெல்லி:
சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதியன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரத் தாக்குதல்களை நடத்தபாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
டெல்லியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள்திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையிடமிருந்து தொடர்ந்து எச்சரிக்கைகள் வந்து கொண்டிருப்பதாக டெல்லிமாநகரப் புதிய போலீஸ் கமிஷனரான ஆர்.எஸ். குப்தா தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களிலும் கூட கடும் தாக்குதலை நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக குப்தா கூறினார்.
காஷ்மீரிலிருந்து செயல்படும் பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள்வந்த வண்ணம் உள்ளதாகவும் குப்தா தெரிவித்தார்.
இதையடுத்து டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ளஅனைத்து லாட்ஜ்களிலும் வந்து செல்லும் மக்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களைப் பற்றியஅனைத்துத் தகவல்களும் விவரமாகச் சேகரிக்கப்படுகின்றன.
டெல்லி மட்டுமில்லாமல் நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநில உள்துறை அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் மத்திய உளவுத்துறையிடமிருந்து தாக்குதல் குறித்தஎச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications