காங்கிரசுடன் இணைப்பு: தமாகா பொதுக்குழுவில் நாளை தீர்மானம்
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன் தங்கள் கட்சியை இணைப்பது குறித்து நாளை சென்னையில் கூடவுள்ள தமாகாபொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
கடந்த பல மாத முயற்சிகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்டு 14ம் தேதி காங்கிரசுடன் தமாகாவை இணைப்பதென்றுமுடிவு செய்யப்பட்டது. மதுரையில் இந்த இணைப்பு விழா மிகவும் பிரம்மாண்டமான முறையில்நடத்தப்படவுள்ளது.
முதலில் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி இணைப்பு விழாவைநடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று தான் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது என்பதால்இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் ஆகஸ்டு 1 மற்றும் 12 ஆகிய தேதிகளுக்கும் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் 12ம் தேதிதுணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால் இறுதியாக ஆகஸ்டு 14ம் தேதி இணைப்பு விழா நடைபெறும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தமாகாவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தங்கள்கட்சியை இணைப்பது குறித்த தீர்மானம் நாளைய கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.
காமராஜர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக நடத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications