For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மின் சப்ளை விரைவில் தனியார்மயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் மின் வினியோகம் விரைவில் தனியார்மயமாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கிறோம். நேற்றுஎன்னைச் சந்தித்த மத்திய மின்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்படும்என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் தமிழகத்தில் மின் வினியோகத்தை தனியார்மயமாக்குவது குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பிப்போம் என்றார்.

இதனால் தமிழகத்தின் மின் வினியோகத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்படவுள்ளன. தனியார் வசம் மின் வினியோகம் சென்றால் மின் திருட்டுபோன்றவை தடுக்கப்படும், லோ-வோல்டேஜ் போன்ற விவகாரங்கள் தீரும்.

போக்குவரத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா இப்போது மின் சப்ளையையும் மின்துறையிடம் இருந்து பறித்துதனியார்வசம் தரத் திட்டமிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X