2 குழந்தைகளைக் கொன்று தாயும் தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் தீ வைத்து எரித்துவிட்டு தானும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (வயது 36) என்ற அந்தப் பெண் நேற்றிரவு தனது வீட்டில் 10 மற்றும் 6 வயதான இருமகன்களின் உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். அவர்கள் அலறித் துடித்தபடி கருகியபோது தானும் தனது உடலில் தீவைத்துக் கொண்டு கருகி இறந்தார்.
வீட்டில் பணப் பிரச்சனை காரணமாகவே அவர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications