பள்ளி மாணவியை விபச்சாரத்தில் தள்ளியவன் மண்டை, மீசையை மழித்து அடி- உதை
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த இரு சாலை விபத்துக்களில் 6 பேர் இறந்தனர். 30 பேர் பலத்தகாயமடைந்தனர்.
முதலில் இரு லாரிகள் மோதிக் கொண்டன. இதில் ஒரு பெண் இறந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு கார், விபத்துக்குள்ளானலாரியின் டீசல் டாங்கில் மோதியது. இதில் அந்தக் கார் தீப்பற்றி அதில் இருந்த 4 பேர் உடல் கருகி இறந்தனர்.
இந்தச் சம்பவம் திண்டுக்கல் அருகே வேடசந்தூர் காக்காதோப்பு விலக்கில் உள்ள பனையூர் என்ற இடத்தில் நேற்றிரவு நடந்தது.
ஒரு விசேஷத்திற்காக கிராம மக்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். அதில் 80 பேர் இருந்தனர். பனையூர் அருகே சென்றபோது இந்த லாரியும் எதிரே வந்த இன்னொரு மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் லாரியில் இருந்த ஒருபெண் தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்தார். கீழே விழுந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இந்த மோதலால் அந்த லாரி கவிழ்ந்துவிட்டது. ஆனால், அந்த ஒரு பெண் தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை. 30 பேருக்குபலத்த காயம் ஏற்பட்டது. மினி லாரியின் டிரைவருகுக்குத் தான் மிகவும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இரு லாரிகளும் சாலையின் நடுவே நின்றிருந்தன. அப்போது அங்கு மிக வேகமாக வந்த ஒரு கார் கவிழ்ந்து கிடந்தலாரியின் டீசல் டாங்கில் வந்து மோதியது. இதில் அந்த டாங்க் மிக பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மோதிய வேகத்தில்கார் தீப் பிடித்துக் கொண்டது.
சில நொடிகளில் கார் முழுவதும் தீப் பற்றிக் கொண்டது. அதில் இருந்தவர்கள் இந்த மோதலால் நிலை குலைந்து போயினர்.
அவர்கள சுதாரிப்பதற்குள் கார் முழுவதும் தீப் பிடித்து அதில் இருந்த 4 பேரும் இறந்தனர்.
இந்தத் தீ லாரி முழுவதும் பரவியது. அதில் அந்த லாரியும் முழுமையாக எரிந்து போனது.
முன்னதாக லாரியின் மீது மோதிய மினி லாரியின் டிரைவர் பலத்த காயமடைந்தார். அவரும் காயமடைந்தவர்களும்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications