சிறையிலிருந்து வந்து வாக்களித்தார் வைகோ
வேலூர்:
வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த வைகோ இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்.
தற்போது வேலூர் சிறையில் உள்ள வைகோ இந்தத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். இதையடுத்து அவரை இன்று பரோலில் வெளியே அனுப்ப தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார். இன்று காலை 11.30 மணிக்கு அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர்சிறையில் இருந்து அழைததுக் கொண்டு சென்னை புறப்பட்டனர். பிற்பகலில் சென்னை சட்டசபை வளாகத்துக் கொண்டு வரப்பட்ட அவர்பிற எம்.எல்.ஏக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
வாக்களித்த பின்னர் உடனடியாக அவர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மாலை 4க்குள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, த.மா.கா. தலைவர் வாசன் ஆகியோர் உள்ளிட்ட அனைத்து 234எம்.எல்.ஏக்களும், சென்னையில் வாக்களிக்க அனுமதி பெற்றிருந்த 9 எம்.பிக்களும் வாக்களித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications