வாக்குப் பதிவு முடிந்தது: கலாம் 85 சதவீத வாக்குகள் பெறுவார்
டெல்லி:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்து முடிந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவுமாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் முதல் ஆளாக நின்று வாக்களித்தார். இதையடுத்து பல கட்சி எம்.பிக்களும்வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் சட்டமன்றக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும்அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின் இருமுறை மட்டுமே சட்டமன்றத்துக்கு வந்துள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று மூன்றாவது முறையாககோட்டைக்கு வந்தார். புதிய பென்ஸ் காரில் வந்திறங்கிய கருணாநிதியுடன் முன்னாள் அமைச்சர்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்ஆகியோரும் உடன் வந்து வாக்களித்தனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 85சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் கேப்டன் லட்சுமி செகல் 10 முதல் 15 சதவீத வாக்குகளைப் பெறுவார்.
தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்படும். லோக்சபா, ராஜ்யசபாவைச் சேர்ந்த 776 எம்.பிக்களும், அனைத்து மாநிலங்களையும்சேர்ந்த 4,120 எம்.எல்.ஏக்களும் இத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தலில் ஒரு எம்.பியின் வாக்கின் மதிப்பு 708 ஆகும். எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகையைப்பொறுத்து மாறுபடும்.
ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்கவுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 10,98,919. இதில் எம்.பிக்களின் மொத்த ஓட்டுமதிப்பு 5,49,408. எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு 5,49,511.
தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 176. இங்குள்ள 234 எம்.எல்.ஏக்களின் மொத்த ஓட்டு மதிப்பு 41,184.












Click it and Unblock the Notifications