For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம், மதுரையில் ரூ.350 கோடி நலத் திட்டங்கள்: ஜெ. துவக்குகிறார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களுக்குச் செல்லவிருக்கும் தமிழகமுதல்வர் ஜெயலலிதா ரூ.350 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத் துவக்கி வைக்கிறார்.

நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்று நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து விட்டுத் திரும்பியஜெயலலிதா, வரும் திங்கள்கிழமை சேலம் மாவட்டத்திற்குச் செல்கிறார்.

சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் ரூ.232 கோடி மதிப்பிலான பல்வேறுநலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

அதன் பிறகு 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் ஜெயலலிதா வழங்குவார்.

சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே ஜெயலலிதா மதுரை செல்கிறார்.

மதுரை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் வரும் செவ்வாய்க்கிழமை கலந்து கொள்ளும்ஜெயலலிதா, சுமார் ரூ.125 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

அதன் பின்னர் சுமார் 7,400 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார்.

ஜெயலலிதா வருகையையொட்டி சேலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X