For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடர்ந்தது

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மூ:

பலத்த மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை இன்று காலை மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

புகழ் பெற்ற அமர்நாத் யாத்திரை கடந்த 19ம் தேதி தொடங்கியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மிரட்டல்காரணமாக அமர்நாத் யாத்திரை நெடுகிலும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பகல்காம் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் கடும் குளிர் காரணமாக அமர்நாத் யாத்திரை நேற்றுதற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 6,200 பக்தர்கள் ஜம்மூவில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். காலநிலை சரியான பிறகு ஓரிரு நாட்களில் அவர்கள் மீண்டும் யாத்திரையைத் தொடங்குவார்கள்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் மழை நின்று விட்டதைத் தொடர்ந்து அமர்நாத் யாத்திரையின் நான்காவது குழுவினர்இன்று காலை தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.

யாத்திரைக்கான சாலைகளெல்லாம் சரியாகி விட்டதை உறுதி செய்து கொண்ட பிறகு, 454 வாகனங்களில் அவர்கள்கிளம்பிச் சென்றனர்.

சிவலிங்கத்தை தரிசித்த ராணுவத்தினர்:

இதற்கிடையே இதுவரை அமர்நாத் குகைக்கு யாத்திரையாகச் சென்று சேர்ந்த 13,666 பக்தர்கள் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசனம் செய்தனர்.

அங்கு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அமர்நாத் குகைக்குச் சென்றிருந்த 6,288 ராணுவத்தினரும் அங்குள்ளசிவலிங்கத்தைத் தரிசித்து வழிபட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X