For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி வழக்கிலிருந்து விலக கர்நாடக நீதிபதி விருப்பம்: விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவிரி பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தொடர்பாக வாதாடி வந்தகர்நாடகத்தைச் சேர்ந்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள விருப்பம்தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீரை காவிரியில் கர்நாடகஅரசு திறந்து விட வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவழக்கு தொடர்ந்தது.

இதற்கிடையே தமிழக விவசாயிகள் நல அமைப்பினரும் கடந்த வாரம் மற்றொரு மனுவை உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்தனர்.

இந்த இரண்டு மனுக்களும் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு வந்தன. நீதிபதி ஒய்.கே. சபர்வால் மற்றும்நீதிபதி சிவராஜ் பாட்டீல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதை விசாரித்தது.

தான் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக நீதிபதி சிவராஜ்பாட்டீல் அப்போது கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப்பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இனிமேல் காவிரி ஆணையக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சமீபத்தில்கூறிய தமிழக அரசு, காவிரி பிரச்சனை தொடர்பாக கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்குதொடர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X