சென்னை மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மாநகராட்சி மகப்பேறு மருத்தவமனையில் நேற்று ஒரு ஆண் குழந்தை கடத்தப்பட்டது.

சென்னை-செனாய் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு மருத்துவமனை உள்ளது.

இங்கு கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதினங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் நேற்று அந்தக் குழந்தை நேற்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இதனால் அதிர்ந்து போனஅதன் பெற்றோர் மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர்கள் தான் தன் குழந்தையைக் கடத்திச் சென்றிருப்பார்கள் அல்லது கடத்தலுக்குஉதவியிருப்பார்கள் என்று குழந்தையின் தந்தை புகார் கூறினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரவு அந்தக் குழந்தையின் பெற்றோரும் உறவினர்களும் சக நோயாளிகளும்குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கோரி மருத்துவமனையின் முன் திடீர் சாலை மறியலில்ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து மறியல் செய்தவர்களைச் சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையே சைதாப்பேட்டையில் சாலையோரம் ஒரு குழந்தை அனாதையாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் அந்தக் குழந்தையை மீட்டனர்.

விசாரணையில் அந்தக் குழந்தை செனாய் நகர் மாநகராட்சி மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட குழந்தை தான்அது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்தக் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த ஆண் குழந்தையைக் கடத்திச் சென்று சைதாப்பேட்டையில் கொண்டு போய் போட்டவர்கள்யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+