For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை குண்டு வெடிப்பு: மதானிக்கு ஜாமீன் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் தரசென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் தங்கள் மீதான வழக்கை விரைவில்முடிக்குமாறு கோரி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

இதற்கிடையே இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மதானி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் மதானியை விடுதலை செய்தால் மேலும் கொடூரமான சம்பவங்கள் நிகழக் கூடும் என்பதால் அவருக்குஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்று வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மதானியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X