மதுரை சென்றார் ஜெயலலிதா: ரூ.127 கோடி நலப் பணிகள் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைப்பதற்காக இன்று பகல் மதுரைக்கு வந்தார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.

சேலத்தில் நேற்று ரூ.232 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைத்த ஜெயலலிதா,தன்னுடைய சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவே மதுரை வருவதாகத் தான் முதலில்திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று மாலையே சென்னை திரும்பிய அவர், இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்பகல் 12.20 மணிக்கு மதுரைக்கு வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் மேலூருக்குக் கிளம்பிச் சென்றார் ஜெயலலிதா

மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்ட ஜெயலலிதா, சுமார்ரூ.127 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் 7,155 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

இன்று மாலையே ஜெயலலிதா சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா வருகையையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.

திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தான் விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். எனவே மதிமுகவினர் இம்மாவட்டத்தில் அதிகம் என்பதால்ஜெயலலிதா வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலை நெடுகிலும் 50 அடிக்கு ஒருவர் வீதும் நூற்றுக்கணக்கான போலீசார்நிறுத்தப்பட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+