என்னை சந்திக்க வர வேண்டாம்: மதிமுகவினருக்கு வைகோ மீண்டும் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
என்னைச் சந்திப்பதற்காக சிறைக்கு வர வேண்டாம் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளரான வைகோ தன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று வைகோவை சந்தித்துப் பேசிய பாமகவைச் சேர்ந்த மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணைஅமைச்சரான என்.டி. சண்முகம் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
உங்களைச் சந்திக்க வெளியே கட்சித் தொண்டர்கள் காத்திருப்பதாக வைகோவிடம் கூறினேன்.
என்னைப் பார்க்க வரும் அனைவரும் சிறை விதிகளின் படி உள்ளே வர முடியும் என்று கூற முடியாது. எனவேபலரும் என்னைச் சந்திக்க முடியாமல் திரும்புவது வேதனையாக உள்ளது என்று என்னிடம் வைகோ கூறினார்.
எனவே தன்னைச் சந்திக்க மதிமுக தொண்டர்கள் யாரும் சிறைக்கு வர வேண்டாம் என்று கூறுமாறு என்னிடம்கேட்டுக் கொண்டார் என்றார் சண்முகம்.












Click it and Unblock the Notifications