பிரபாகரனை சந்திக்கத் தயார்: ரணில்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்கத் தயார் என்று இலங்கை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கே கூறினார்.

இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஆதரவு கோரி அமெரிக்காவுக்குப்பயணம் மேற்கொண்டுள்ள ரணில் "வாஷிங்டன் டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியின் போதுஇவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகுஅமெரிக்காவிலுள்ள பல தமிழ் அமைப்புகளும் புலிகளுக்கு நிதி அளித்து வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்தே புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர் என்று அந்தப் பத்திரிக்கையில் ரணில்கூறியுள்ளார்.

ஆகஸ்டு 2ல் பேச்சுவார்த்தை?

இதற்கிடையே நேற்று வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய ரணில் ஆகஸ்டு 2ம் தேதி தாய்லாந்தில் பேச்சுவார்த்தைதுவங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள்ளாகவே பேச்சைத் துவக்கி விட வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பியதாகவும்ஆனால் ஆகஸ்டு 2ம் தேதி பேச்சு நடத்த புலிகள் பரிசீலனை செய்துள்ளதாகவும் தெரிவித்த ரணில் இதற்கு நாங்கள்மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே புலிகள் மீதான தடை விலக்கப்படும் என்று மீண்டும் உறுதியளித்தார் ரணில்.இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+