For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

""ராமதாஸ் கோரிக்கையால் தமிழர் ஒற்றுமை சிதையும்"": நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் கோரிக்கை தமிழர்களின்ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நெடுமாறன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்திலிருந்து நாயக்கர், மராட்டியர், நவாபுகள் ஆட்சிக் காலம் வரையிலும்தமிழகம் ஒன்றுபடாமல் பல பகுதிகளாகப் பிளவுபட்டே கிடந்தது.

பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின் போது தான் பிற மாநிலப் பகுதிகளுடன் தமிழகத்தையும் இணைத்து சென்னைமாகாணம் உருவானது.

அதைத் தொடர்ந்து மொழி வழி மாநிலப் பிரிவினை கடந்த 1956ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகே3,000 ஆண்டுகளாகப் பிளவுபட்டுக் கிடந்த தமிழகம் ஒன்று பட்டது.

தமிழகத்திற்குரிய எல்லைப் பகுதிகளில் பல இன்னமும் நம் மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க நினைப்பது தமிழர் நலனுக்கு எதிரானதாகும். டாக்டர் ராமதாசின்இந்தக் கோரிக்கை தமிழர்களின் ஒற்றுமையையே சிதைத்து விடும்.

அந்தக் கோரிக்கையைக் கைவிடுமாறு நண்பர் ராமதாசை வேண்டிக் கொள்கிறேன் என்று அவ்வறிக்கையில்கூறியுள்ளார் நெடுமாறன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X