போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி இல்லை: தமிழக அரசு மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் கூறினார்.
தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சமீப காலமாகப் போலீசார்கோரிக்கை எழுப்பி வந்தனர்.
போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் மணிவண்ணன்,சிவகுமார் ஆகிய முதல்நிலைக் காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால் அவற்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முதலில் அரசிடம் மனு கொடுத்து விட்டு அங்கு நிராகரிக்கப்பட்டால் நீதிமன்றத்துக்குவாருங்கள் என்று கூறிவிட்டது.
இதையடுத்து தமிழக அரசிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. கடந்த வாரம் அனுமதி பெறாத போலீஸ்சங்க நிர்வாகிகளும் இது குறித்து நெய்ல்வாலுடன் பேச்சு நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதி கிடையாது என்று நெய்ல்வால் நேற்றுதிட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
போலீசாரின் குறைகளை அவ்வப்போது தமிழக அரசு தீர்த்து வருகிறது. மேலும் போலீசாரின் குறைகளை நேரில்கேட்டறியப் போவதாக முதல்வர் ஜெயலலிதாவும் சமீபத்தில் கூறியுள்ளார் என்று நெய்வால் அதற்கு விளக்கமும்அளித்தார்.
போலீசார் தங்கள் பிரச்சனைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றும் இதனால்தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் போலீஸ் சங்கம் தேவையில்லாத ஒன்று என்றும் நெய்ல்வால் கூறினார்.