ஸ்டாலின் பதவிப் பறிப்பை கண்டித்து புதுவை திமுகவினர் நாளை உண்ணாவிரதம்
பாண்டிச்சேரி:
சென்னை மாநகர மேயராக இருந்த ஸ்டாலினின் பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து பாண்டிச்சேரி திமுகவினர்நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.
ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தின் மூலம் கடந்த மாதம் ஸ்டாலினின் மேயர் பதவி பறிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டங்களும் பொதுக் கூட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஸ்டாலினின் பதவிப் பறிப்பைக் கண்டித்து பாண்டிச்சேரி திமுகவினர் நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்துகின்றனர்.
ஒர்லியான்பேட்டை எம்.எல்.ஏவான சிவா தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் அந்நகரின் பஸ்நிலையத்தின் முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க் கட்சித் தலைவருமான ஜானகிராமன், மாநில திமுக துணைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.