For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி கைது விவகாரம்: எனக்கு ஒன்னுமே தெரியாது- முத்துக் கருப்பன் சாட்சியம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியைக் கைது செய்வதில் சென்னை நகர போலீசாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என அப்போதைய சென்னைமாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் சாட்சியம் அளித்தார்.

கருணாநிதி கைது அதைத் தொடர்ந்து நடந்த திமுக பேரணியில் போலீசார் மற்றும் அதிமுகவினர், தாதா வீரமணியின் குப்பத்து ரவுடிகள்நடத்திய வன்மூறை ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி பக்தவச்சலம் கமிஷனிடம் இன்று முத்துக்கருப்பன் சாட்சியம்அளித்தார்.

அந்த வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 திமுகவினர் கொல்லப்பட்டனர். பலர் வெட்டப்பட்டனர்.பத்திரிக்கையாளர்களையும் போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். அந்தப் பேரணியில் வன்முறை வெடிகக் காரணமாக இருந்தரெளடிகளை அழைத்து வந்ததே முத்துக்கருப்பன் தான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறயிருந்தார்.

கருணாநிதி கைது நேரத்தில் அதிமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்த முத்து பின்னர் அவர்களால் ஒதுக்கப்பட்டார். இப்போது அதிகாரம்இல்லாத ஆயுதப் படை தலைவராக ஒரம் கட்டப்பட்டுள்ளார் முத்து.

இன்று சதாசிவம் கமிஷன் முன் முத்துக்கருப்பன் தந்த சாட்சியத்தின் விவரம்:

மேம்பால ஊழல் தொடர்பான வழக்கை பதிவு செய்து கருணாநிதியை கைது செய்தது கிரைம் பிராஞ்ச் சிஐடி போலீசார் தான். அவர்களுக்குசென்னை நகர போலீஸ் உதவி தான் வழங்கியது.

கருணாநிதி கைதை எதிர்த்து திமுக பேரணி நடத்தியபோது நான் பேரணியில் வரவே இல்லை. நான் எனது அலுவலகத்தில் இருந்தவண்ணம்பேரணியைக் கண்காணித்து வந்தேன்.

கலவரம் நடந்த முடிந்த பின்னர் சில நிருபர்கள் தான் போலீசாரின் செயல்பாடு குறித்து குற்றம் சுமத்தினர். ஒரே ஒரு நிருபர் மட்டும் தான்புகார் தந்தார் என்றார் முத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X